ETV Bharat / bharat

கர்நாடகா: தாழ்த்தப்பட்ட பெண் குழாயில் நீர் குடித்ததால் காலியாக்கப்பட்ட டேங்க்

author img

By

Published : Nov 20, 2022, 4:48 PM IST

கர்நாடக மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச்சேர்ந்த பெண் ஒருவர் குழாயில் தண்ணீர் குடித்ததால் கிராம மக்கள் அந்த தண்ணீர் தொட்டியை காலி செய்து சுத்தம் செய்துள்ளனர்.

Etv Bharatகர்நாடகா: தாழ்த்தப்பட்ட பெண் குழாயில் தண்ணீர் குடித்ததால் காலியான தண்ணீர் தொட்டி
Etv Bharatகர்நாடகா: தாழ்த்தப்பட்ட பெண் குழாயில் தண்ணீர் குடித்ததால் காலியான தண்ணீர் தொட்டி

சாமராஜநகர்: கர்நாடகாவின் சாமராஜநகர் மாவட்டத்தில் உள்ள ஹெக்கோதரா கிராமத்தில் உள்ள ஒரு கிராம வாசிகள் சிலர் அங்கிருந்த தண்ணீர் தொட்டி குழாயில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச்சேர்ந்த பெண் தண்ணீர் குடித்ததையடுத்து, அந்த தண்ணீர் தொட்டியை காலி செய்து கழுவியுள்ளனர்.

அக்கிராமத்தில் வசிக்கும் மற்றொரு தாழ்த்தப்பட்ட இளைஞரின் திருமண நிகழ்ச்சிக்காக மணப்பெண்ணின் குடும்பத்தினர் கிராமத்திற்கு வந்திருந்தனர். பெண்வீட்டாரைச் சேர்ந்த பெண் ஒருவர் அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் இருந்து நீர் அருந்தியுள்ளார்.

இது குறித்து சாமராஜநகர் வட்டாட்சியர் பசவராஜ் அந்த கிராமத்தினரிடம் விசாரித்த போது , ‘தண்ணீர் குடித்த பெண் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதை அறிந்ததும், தண்ணீர் தொட்டியைக் காலி செய்து கழுவியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். காவல்துறையினர் இது குறித்து விசாரித்து வருகின்றனர்’ என்றார்.

இதையும் படிங்க:கர்நாடகாவில் தீப்பற்றி எரிந்த ஆட்டோ... தமிழ்நாடு எல்லையில் பாதுகாப்பு தீவிரம்...

சாமராஜநகர்: கர்நாடகாவின் சாமராஜநகர் மாவட்டத்தில் உள்ள ஹெக்கோதரா கிராமத்தில் உள்ள ஒரு கிராம வாசிகள் சிலர் அங்கிருந்த தண்ணீர் தொட்டி குழாயில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச்சேர்ந்த பெண் தண்ணீர் குடித்ததையடுத்து, அந்த தண்ணீர் தொட்டியை காலி செய்து கழுவியுள்ளனர்.

அக்கிராமத்தில் வசிக்கும் மற்றொரு தாழ்த்தப்பட்ட இளைஞரின் திருமண நிகழ்ச்சிக்காக மணப்பெண்ணின் குடும்பத்தினர் கிராமத்திற்கு வந்திருந்தனர். பெண்வீட்டாரைச் சேர்ந்த பெண் ஒருவர் அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் இருந்து நீர் அருந்தியுள்ளார்.

இது குறித்து சாமராஜநகர் வட்டாட்சியர் பசவராஜ் அந்த கிராமத்தினரிடம் விசாரித்த போது , ‘தண்ணீர் குடித்த பெண் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதை அறிந்ததும், தண்ணீர் தொட்டியைக் காலி செய்து கழுவியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். காவல்துறையினர் இது குறித்து விசாரித்து வருகின்றனர்’ என்றார்.

இதையும் படிங்க:கர்நாடகாவில் தீப்பற்றி எரிந்த ஆட்டோ... தமிழ்நாடு எல்லையில் பாதுகாப்பு தீவிரம்...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.